இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 21,954 பேருக்கு கரோனா தொற்று

6th May 2021 06:51 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் புதிதாக 21,954 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 72 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,28,186 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 8446 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் ஆந்திரத்தில் 1,82,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 10,141 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 10,37,411ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT