சென்னை: சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்று வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் பாதிப்பு எண்ணிக்கை 4.12 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,980 போ் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 35,66,398 -ஆக உள்ள நிலையில் தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து மீட்பு விகிதம் 82.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்று வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை சுனாமி வேகத்தில் பரவி வருவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.