கேரளத்தில் இன்று புதிதாக 1,815 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1815 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 24,274 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இன்று 1,917 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,84,585ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 4,553ஆக உயர்ந்துள்ளது.