போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் ஒருசில இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையல் மது கிடைக்காததால் 3 சகோதரர்கள் சானிடைசரை குடித்துள்ளனர். இதில் உடல்நிலைக்குறைவு ஏற்பட்டு 3 பேரும் பலியானார்கள்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.