கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது; அதன் கரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது என்று சா்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சா்வதேச மகளிா் தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:
உலகில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் மையம் எதுவென்று பாா்த்தால், அது இந்தியாதான். இந்தியாவின் கரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது.
கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
வங்கதேசம், நேபாளம், மியான்மா் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது.
உலக அளவில் சுகாதார நெருக்கடி நிலவும் வேளையில், தனது தடுப்பூசி கொள்கைகள் மூலம் உலக நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமாா் 7%. அந்நாட்டின் பங்கு மிகப் பெரிய அளவில் இருப்பதால், அங்கு பொருளாதார ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் இதர நாடுகளில், குறிப்பாக பிராந்திய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.