இந்தியா

கையில் குழந்தையுடன் பெண் போக்குவரத்துக் காவலர் செய்த வேலை; விசாரணைக்கு உத்தரவு

DIN


சண்டிகர் மாநிலத்தில் போக்குவரத்துக் காவலர் பிரியங்கா, தனது கைக் குழந்தையை வைத்துக் கொண்டு பரபரப்பான சாலையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

பிறந்து ஒரு சில மாதங்களே ஆன கைக் குழந்தையை வைத்துக் கொண்டு, சாலையில் போகும் வாகனங்களை சீரமைத்துள்ளார் பிரியங்கா. 

இந்தக் காட்சியை, அவ்வழியாகச் சென்ற பயணிகள் சிலர் தங்களது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இது வேகமாகப் பகிரப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்த சண்டிகர் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், தனது கைக் குழந்தையுடன் பிரியங்கா, போக்குவரத்தை சீர் செய்தது உண்மைதான் என்று சக பெண் போக்குவரத்துக் காவலர் உறுதி செய்துள்ளார். எனினும், இது குறித்து ஊடகங்களில் கருத்துக் கூற பிரியங்கா மறுத்துவிட்டார். 

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்ட நாளில், ஒரு போக்குவரத்துப் பெண் காவலர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபட்டது குறித்து பொதுமக்கள் பலரும் இருவேறு கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

கையில் குழந்தையுடன் கடமையைச் செய்த பெண் காவலருக்கு ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், இதுபோன்ற நிலையில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து முதற்கட்ட விசாரணையில், காலை எட்டு மணிக்கு பிரியங்கா பணிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் எட்டு மணிக்கு பணிக்கு வராததால், அவரது மூத்த அதிகாரிகள் பிரியங்காவை கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT