இந்தியா

மாநிலங்களவையை அமளிக்குள்ளாக்கிய பெட்ரோல், டீசல் விலை உயர்வு

DIN

அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு உச்சம் பெற்றுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.90க்கு மேலும், டீசல் லிட்டருக்கு ரூ.85க்கு மேலும் விற்பனையாகி வருகிறது. 

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

இதனால் சபைத்தலைவர் மதியம் 12 மணிவரை மாநிலங்களவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT