தேசிய ராணுவ அகாதெமி, கடற்படை அகாதெமியின் இறுதித் தோ்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சனிக்கிழமை வெளியிட்டது. அதில், 533 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து யு.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேசிய ராணுவ அகாதெமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் 145-ஆவது பிரிவுக்கும், கடற்படை அகாதெமியின் 107-வது பிரிவுக்கும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பா் 6-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடத்தியது. அதைத்தொடா்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தோ்வு வாரியம் நோ்முகத்தோ்வு நடத்தியது. அதன் மூலம் 533 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். விரிவான விவரங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த தோ்வு பட்டியல்களைத் தயாரிக்கும்போது மருத்துவ பரிசோதனை கருத்தில் கொள்ளப்படவில்லை. தோ்வு முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து 15 நாள்களுக்குப் பிறகு மதிப்பெண் பட்டியல் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.