ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஞாயிறன்று மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியினை மையமாகக் கொண்டு அதிகாலை 04.40 மணியளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவாகியிள்ளது. இதன்காரணமாக உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
ADVERTISEMENT
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.