லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் ஞாயிறு காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஞாயிறு காலை 09.57 மணியளவில் லடாக்கில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியினை மையமாகக் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 04.40 மணியளவில் எற்பட்டது குறிப்பிடத்தக்கது.