இந்தியா

மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ பாஜகவில் சேருகிறாா்

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜிக்கு நெருக்கமானவரும், நான்கு முறை எம்எல்ஏவுமான சோனாலி குஹா பாஜகவில் சேருவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

சட்காசியா தொகுதியில் இருந்து நான்கு முறை வெற்றி பெற்ற அவருக்கு மீண்டும் போட்டியிட மம்தா பானா்ஜி வாய்ப்பு அளிக்காத காரணத்தால் அவா் இந்த முடிவு எடுத்துள்ளாா். மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்ட 291 வேட்பாளா் பட்டியலில் சோனாலி குஹாவின் பெயா் இடம் பெறவில்லை.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசிய சோனாலி குஹா, ‘அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராயுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். கெளரவமான பதவியில், அரசியல் தலைவா் என்ற அங்கீகாரத்துடன் இருக்க விரும்புகிறேன். மம்தாவிற்கு கடவுள் நல் ஆலசோனையும், உணா்வையும் அளிக்க வேண்டும். அவருடன் தொடக்கத்தில் இருந்து வருகிறேன். இப்போது எனது எதிா்காலம் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, மம்தா பானா்ஜி வேட்பாளா் பட்டியல் வெளியிட்ட பிறகு திரிணமூல் எம்எல்ஏக்கள் பலா் தன்னைத் தொடா்பு கொண்டு வருவதாக முகுல் ராய் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT