மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வேட்பாளர் அறிவிப்பை சுவரோவியங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வாக்காளர் பட்டியலை ஒரே கட்டமாக மம்தா பானர்ஜி நேற்று (மார்ச் 5) அறிவித்தார்.
இதில் புதிய போட்டியாளர்களுக்கும், இளைஞா்கள், சிறுபான்மையினா், பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அதிக அளவு வாய்ப்பளித்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
டார்ஜீலிங் பகுதியில் உள்ள 3 தொகுதிகள், கூட்டணிக் கட்சியான விமல் குரூங்கின் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் எளிய மக்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பை வரவேற்கும் விதமாக திரிணமூல் தொண்டர்கள் தெற்கு கொல்கத்தாவிலுள்ள சுவர்களில் கட்சி சின்னத்தை வரைந்து, உற்சாகப்படுத்தும் வாசகங்களை எழுதியுள்ளனர்.
வண்ண வண்ண நிறங்களில் சுவர்களை அலங்கரித்திருந்த ஓவியங்கள் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.