இந்தியா

‘மகாராஷ்டிர பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் அவசியம்’: ம.பி. அரசு

DIN

அதிகரிக்கும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து வரும் பயணிகள் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்தியப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

போபால், இந்தூர், ஜபல்பூர், பெத்துல், சிந்த்வாரா, உஜ்ஜைன் உள்ளிட்ட மாநில எல்லைப்பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

மத்திய பிரதேச எல்லைப் பகுதிகளில் புதிய கரோனா தொற்று பதிவாகியுள்ளதன் அடிப்படையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 8 முதல் போபால் மற்றும் இந்தூரில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 457 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT