கரோனா தொற்று பரவலின் அதிகரிப்பால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மீண்டும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அறிவித்து ஜலந்தர் துணை ஆணையர் சனிக்கிழமை அறிவித்தார். இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஜலந்தரில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.