இந்தியா

அதிகரிக்கும் கரோனா பரவல்: 4 மாநில பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் அரசு

DIN

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக 4 மாநில பயணிகள் கரோனா எதிர்மறை சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்துவரும் காரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு வருபவர்கள் கரோனா பரிசோதனைக்கு எதிர்மறையான சான்றிதழை பெற்றிருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்திலிருந்து வருபவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT