மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், உயர்மட்ட பொது சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய சுகாதாரக் குழுவினர் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிராவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மத்தியக் குழுவை பேரிடர் மேலாண்மையின் பி.ரவீந்திரன் தலைமையேற்று வழிநடத்துகிறார்.
இதேபோன்று பஞ்சாபில் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் வழிநடத்துகிறார்.
இந்த குழு கரோனா அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து தொற்று கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ளது.