அசாதுதீன் ஒவைசி கட்சிக்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தலில் பட்டம் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது.
இந்நிலையில் இம்மாநிலங்களில் அக்கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.