கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் முதல் கட்ட பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு நேரத்தை தோ்தல் ஆணையம் அரை மணி நேரம் நீட்டித்துள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தில் மாா்ச் 27-ஆம் தேதி 30 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நேரம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.