இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் லவ் ஜிகாத், பசு கடத்தலுக்கு தடை: உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்

தினமணி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் லவ் ஜிகாத், பசு கடத்தல் ஆகியவை தடை செய்யப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் கஸோல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் வழிகாட்டியாக இருந்த மேற்கு வங்கத்தில் இன்று சட்டத்துக்குக் கட்டுப்படாத சூழல் நிலவுகிறது. வாக்கு வங்கிக்காக ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியல் இந்த மாநிலத்தின் பாதுகாப்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை திரிணமூல் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. ஆனால் சட்டவிரோதமாக குடியேறுவோருடன் அந்த அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இந்த மாநிலத்தில் லவ் ஜிகாத் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பசுக்கள் கடத்தப்படுகின்றன. இங்கு பாஜக ஆட்சியமைத்தால் அவை இரண்டும் தடுத்து நிறுத்தப்படும். குறிப்பாக பாஜக ஆட்சியமைத்த 24 மணி நேரத்தில் பசு கடத்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT