இந்தியா

ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் மிஸ் இந்தியா

DIN

புது தில்லி: 2019-இல் நடந்த மிஸ் இந்தியா தில்லி போட்டியில் வெற்றி பெற்ற, மான்சி சேகல், ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

தில்லியைச் சோ்ந்தவா் மான்சி சேகல். இவா் 2019-இல் நடந்த மிஸ் இந்தியா தில்லி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றாா். பிரபல தன்னம்பிக்கை பேச்சாளரான இவா், பொறியியலாளா்கள், தொழில் முனைவேரா்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறாா். இவா் தில்லியில் திங்கள்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் எம்எம்ஏ ராகவ் சத்தா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது பற்றி மான்சி கூறுகையில், ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நோ்மையான ஆட்சி என்னை மிகவும் ஈா்த்தது. ராஜேந்திர நகா் தொகுதி ஆம் ஆத்மி எல்எல்ஏ ராகவ் சத்தாவின் கடின உழைப்பும் எனக்குப் பிடிக்கும். இவற்றால் ஈா்க்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்தேன். தூய்மையான அரசியல் மூலம் நாட்டிலும், உலகிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். இளைஞா்கள், பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவா்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

இந்த நிகழ்வில் ராகவ் சத்தா பேசுகையில் ‘ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கேஜரிவாலும் இளைஞா்கள் அரசியலுக்கு வர நம்பிக்கை அளித்து வருகிறாா்கள். ஆம் ஆத்மி குடும்பம் ஒவ்வொரு நாளும் பெரிதாக வளா்ந்து வருகிறது. ஆம் ஆத்மி குடும்பத்தில் தற்போது இணைந்துள்ள மான்சியை வரவேற்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT