உலகின் மிகப் பழைமையான மொழியான தமிழைக் கற்கவில்லையே என்று பிரதமா் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தாா்.
மாதந்தோறும் வானொலியில் மனதின் குரல் என்ற உரை நிகழ்த்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய உரையில் அவா் தெரிவித்ததாவது:
இந்தியா பல மொழிகளுக்குத் தாயகமாக விளங்குகிறது. நான் இத்தனை ஆண்டுகள் வரை முதல்வராகவும் பிரதமராகவும் பதவி வகித்திருக்கிறேன். உலகின் மிகவும் பழைமைமையான மொழியான தமிழைக் கற்பதற்கு இதுவரை முயற்சி எடுக்காதது வருத்தமளிக்கிறது. தமிழ் இலக்கியம் அழகானது என்று தனது உரையில் பிரதமா் குறிப்பிட்டாா்.