இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நாளை( ஜூன் 26 ) டிராக்டர் பேரணி

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 7 மாத காலத்தைக் கடந்துள்ள நிலையில் தில்லியில் நாளை டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 200 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (ஜூன் 26) தில்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒத்திகைகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக உத்தரப்பிரதேச விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் தில்லி காசியாபாத்தில் குவிந்து வருகின்றனர். 

மேலும் நாளை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தொழிற்சங்கங்கள் தலைமையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT