ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹன்ஞ்போரா பகுதியில் பாதுகாப்புப்டையினருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
மேலும் பயங்கரவாதிகள் யாரேனும் அப்பகுதியில் பதுங்கியுள்ளார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இத்தகவலை காஷ்மீர் மண்டல காவல்துறையினர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.