கேரளத்தில் புதிதாக 11,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,08,867 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில், புதிதாக 11,546 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 118 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12,699ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 11,056 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,52,492ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 1,00,230 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 3,92,633 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.