உத்தரப்பிரதேசத்தின் காட்டுமிராண்டிகளின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 17 வயதான சிறுமி ஒருவர் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு 2 மாடியிலிருந்து தூக்கியெறியப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கேட்டால் ஆன்மா நடுங்கும். ஆனால் மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "ஜங்கிள் ராஜில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது" என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.