மகாராஷ்டிரத்தில் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2 நாள்கள் நடைபெறும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்
மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூலை 5ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரொனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டம் ஜூலை 6ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் மாநிலத்தில் நிலவும் கரோனா தொற்று நிலை, மராத்தா இடஒதுக்கீடு விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.