இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: ராகுல் காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்

DIN


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரவிசங்கர் பிரசாத் கூறியது:

"ராகுல் காந்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா, இல்லையா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாது. ஒருவேளை இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்."

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை மற்றும் கரோனாவை கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி நாள்தோறும் விமரிசித்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்திக்கு மே மாதம் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT