இந்தியா

நாட்டில் மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முழு விவரம்

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போதைக்குத் தீர்வாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஐசிஎம்ஆர் தலைவர் தெரிவித்துள்ளார். ஜூலையிலிருந்து ஒருநாளைக்கு ஒரு கோடி தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் ஐசிஎம்ஆர் வெளிப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 27,66,93,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை1,01,19,241
இரண்டாவது தவணை70,65,889
முன்களப் பணியாளர்கள்முதல் தவணை1,71,08,593
இரண்டாவது தவணை90,32,813
18-44 வயதினர்முதல் தவணை5,42,21,110
இரண்டாவது தவணை12,27,088
45-59 வயதினர்முதல் தவணை7,98,16,559
இரண்டாவது தவணை1,26,54,117
60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் தவணை6,44,21,583
இரண்டாவது தவணை2,10,26,579
மொத்தம் 27,66,93,572

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT