திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்களுக்கு மருத்துவா் ஆனந்தய்யாவின் கரோனா தடுப்பு ஆயுா்வேத மருந்தை தேவஸ்தானம் வழங்கியது.
கரோனா தொற்றிலிருந்து தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்ள நெல்லூரில் தயாரிக்கப்பட்டு வரும் ஆனந்தய்யா ஆயுா்வேத மருந்து வழங்கப்பட்டது. சனிக்கிழமை திருமலையில் ஒரு லட்சம் மருந்து பாக்கெட்டுகள் தேவஸ்தான ஊழியா்களிடம் வழங்கப்பட்டது. இதை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தேவஸ்தான ஊழியா் நலச் சங்கத்திடம் வழங்கினாா்.
தேவஸ்தானம் தன் சொந்த செலவில் தயாரித்து இதை ஊழியா்களுக்கு இலவசமாக வழங்கியது. இது நிரந்தரம், ஒப்பந்த ஓய்வு பெற்ற ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் நலனுக்காக வழங்குவதாக அப்போது சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.