கொழும்பு: இலங்கையில் கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கரோனா 3-ஆவது அலை காரணமாக அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்காததால் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் 2,30,692 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,374 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.