இந்தியா

செங்கோட்டை வன்முறை: சித்து உள்ளிட்டோருக்கு எதிராக போலீஸார் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN


புது தில்லி: தில்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தின்போது நிகழ்ந்த வன்முறை வழக்கு தொடர்பாக நடிகர்- சமூக ஆர்வலர் தீப் சித்து மற்றும் பிறருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் போலீஸார் 
துணை குற்றப்பத்திரிகையை வியாழக்கிழமை தாக்கல் செய்தனர்.
இந்த புதிய குற்றப்பத்திரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வது தொடர்பான விவகாரம் மீதான உத்தரவை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கஜேந்திர சிங் நாகர் சனிக்கிழமை (ஜூன் 19) பிற்பகல் 2 மணிக்கு பிறப்பிக்க உள்ளார்.
இதுதொடர்பாக நீதிமன்றம் கூறுகையில், "இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, இந்த விவகாரத்தில் கடுமையாக காயமுற்ற சாட்சிகளின் பெயர்கள் அல்லது ஆயுதங்கள் பறிக்கப்பட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்' என்று தெரிவித்தது. 
முன்னதாக, தில்லியில் நிகழாண்டு ஜனவரி 26-ஆம் தேதி, மத்திய அரசின் 3 சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றபோது, தில்லி செங்கோட்டை பகுதியில் வன்முறை நிகழ்ந்தது. இதில் போலீஸார் பலர் காயமடைந்தனர். போலீஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மோதலில் ஈடுபட்டபோது இந்த வன்முறை நிகழ்ந்தது.
 இதுதொடர்பாக தில்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்புடைய வழக்கில் கடந்த மே 17-ஆம் தேதி குற்றப்பிரிவு போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் 3,224 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
மேலும், தீப் சித்து உள்பட குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீது வழக்கு விசாரணை கோரினர்.  இந்த விவகார வன்முறையில் சதித் திட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபராக தீப் சித்து குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரை போலீஸார் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கைது செய்தனர். அவர் தில்லி செங்கோட்டையில் குழப்பத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்ததாகவும் போலீஸார் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT