இந்தியா

"தடுப்பூசிதான் இப்போதைய தேவை'

DIN


புது தில்லி: கரோனா தடுப்பூசிகளை விரைந்து அனைவருக்கும் செலுத்துவதுதான் இந்தியாவுக்கு தற்போதைய தேவையே தவிர, தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை மறைக்க பாஜக கூறி வரும் பொய்கள் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொற்றால் மக்கள் உயிரை இழந்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு பிரதமர் மோடியின் பெயருக்கு இதனால் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாத்து வருகிறது.
கரோனா தடுப்பூசிகளை விரைந்து அனைவருக்கும் செலுத்துவதுதான் இந்தியாவுக்கு தற்போதைய தேவையே தவிர, தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை மறைக்க பாஜக கூறி வரும் பொய்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளி காலத்தை நிபுணர் குழுவின் பரிந்துரையில்லாமல் மத்திய அரசு இரண்டு மடங்காக அதிகரித்ததாக வெளியான செய்தியையும் ராகுல் காந்தி தனது சுட்டுரையில் இணைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT