கேரளத்தில் புதிதாக 12,469 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,14,894 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 12,469 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனால் இன்று மேலும் 88 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 11,743ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,08,560 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 2,16,21,033 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.