ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் பலியானார்.
ஜம்மு-காஷ்மீரின் சைத்போரா பகுதியில் இட்கா அருகே காவலர் மீது பயங்கரவாதிகள் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் காவலர் பலியானார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.