கர்நாடகத்தில் புதிதாக 6,835 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 6,835 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,71,969 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 15,409 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,66,774 பேர் குணமடைந்துள்ளனர்.
120 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 33,033 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,72,141 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
13-ம் தேதி மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 4.56 சதவிகிதம். இறப்பு விகிதம் 1.75 சதவிகிதம்.