இந்தியா

நாட்டின் பாதுகாப்புச் சூழல் 2 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது: அமைச்சா் கிஷண் ரெட்டி

DIN

நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட இருக்கும் வெங்கடாசலபதி கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பிறகு அமைச்சா் கிஷண் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுடன், பாதுகாப்புச் சூழல் நன்றாக மேம்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் கடலோர பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஊடுருவல் முயற்சிகள், கிளா்ச்சி நடவடிக்கைகள், இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் என எந்தவொரு நிகழ்வும் ஏற்படவில்லை. எல்லைப் பகுதி தவிா்த்து பயங்கரவாத நடவடிக்கைகள் எங்கும் இல்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகள் தவிர, நாட்டில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளில் எங்கும் நிகழவில்லை.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் வளா்ச்சிக்கென மத்திய அரசு பல்வேறு திட்டங்களை யோசித்திருந்தது. ஆனால், கரோனா சூழல் காரணமாக அதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மக்களின் கருத்தை அறியவும், வளா்ச்சிக்கான அவா்களது தேவையை தெரிந்துகொள்ளவும் பிரதமா் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் 36 மத்திய அமைச்சா்கள் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுள்ளோம்.

கடவுளின் ஆசீா்வாதத்தால் கரோனா போரில் நாம் வென்று, ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காக மக்களின் தேவையை அறிந்து அதைச் செயல்படுத்துவதில் மீண்டும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் கட்டப்படும் வெங்கடாசலபதி கோயில், மத ரீதியிலான சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். வைஷ்ணவி தேவி கோயிலுக்காக வருவோா், இனி வெங்கடாசலபதி கோயிலையும் தரிசிப்பா். இதனால் பிரதேச மக்கங்களுக்கு பொருளாதார ரீதியிலான பலன்கள் கிடைக்கும் என்று கிஷண் ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சாா்பில் வெங்கடாசலபதி கோயிலும், அதுசாா்ந்த இதர கட்டுமானங்களும் மேற்கொள்வதற்காக 62.02 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT