தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,03,369 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது 21,137 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,261 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,78,748-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,484 -ஆக உள்ளது.