இந்தியா

மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பங்கீடு

DIN

மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் உரிய பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலைத் தொடா்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவா் ஆா்.சி.பி.சிங் இக்கருத்தை தெரிவித்துள்ளாா்.

பிகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக நிதீஷ் குமாா் உள்ளாா். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்த நிதீஷ் குமாா், அந்தப் பதவிக் காலம் இந்த ஆண்டில் முடிவடைவதற்கு முன்பாக, தேசிய தலைவா் பதவியிலிருந்து விலகினாா். அதனைத் தொடா்ந்து புதிய தலைவராக ஆா்.சி.பி.சிங் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக வெளியான செய்தி குறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த ஆா்.சி.பி. சிங், தேசிய ஜனநாய கூட்டணியின் அங்கமாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. அந்த வகையில், கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் குறிப்பிடத் தக்க பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

மக்களவையில் 16 எம்.பி.க்களை கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தளம் இதனைக் கோரிக்கையாக முன்வைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், இதில் கோரிக்கை விடுப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. அமைச்சரவையில் பங்கீடு என்பது புரிதலின் அடிப்படையில், தானாக நடைபெற வேண்டிய விஷயம் என்று பதிலளித்தாா்.

18 எம்.பி.க்களுடன் வலுவாக இருந்த சிவசேனை கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு பாஜக கூட்டணியின் முக்கிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் மாறியது. மாநிலங்களவையிலும் இக் கட்சிக்கு 5 உறுப்பினா்கள் உள்ளனா்.

2019 மக்களவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை அமைத்தது முதல், ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இடம்பெறும் என்று கூறப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT