இந்தியா

என்எச்பிசி நிறுவனம் ரூ.3233 கோடி லாபம் ஈட்டியது

DIN

நாட்டின் முன்னணி நீர்மின்சக்தி நிறுவனமான என்எச்பிசி,  2020-21 -ஆம் நிதியாண்டில், மிக அதிகபட்சமாக ரூ.3233 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 

தேசிய நீர்மின்சக்தி கார்பரேஷன் (என்எச்பிசி) மின்துறை அமைச்சகத்தின் ‘மினி ரத்னா’ பிரிவில் உள்ள இந்நிறுவனமானது,  2020-21-ஆம் நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, 2020-21 வரி செலுத்தியபின், என்எச்பிசி நிறுவனம் ரூ.3233.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.3007.17 கோடி நிகர லாபம் ஈட்டியது.  2020-21 ரூ.8506.58 கோடியாகவும், இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.8,735.15 கோடி லாபம் ஈட்டியது. 

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3582.13 கோடி. 2019-20 முழு நிதியாண்டின் நிகர லாபம் ரூ.3,344.91 கோடி. 2020-21 முழு நிதியாண்டின் மொத்த வருமானம் ரூ.10,705.04 கோடி. 2019-20 முழு நிதியாண்டின் மொத்த வருமானம் ரூ.10,776.64 கோடியாக இருந்தது. 

கரோனா  பெருந்தொற்றுக்கு இடையிலும், என்எச்பிசி நிறுவனத்தின் மின் நிலையங்கள், 2020-21-ஆம் ஆண்டில் 24,471 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன.   

கடந்த மார்ச் மாதத்தில் பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.1.25 வழங்கியது. தற்போது கூடுதலாக ஒவ்வொரு பங்குக்கும் 35 காசு ஈவுத் தொகை அளிக்க நிறுவனத்தின் இயக்குநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மொத்த ஈவுத் தொகையாக 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.1607.21 கோடி வழங்கியுள்ளது. 

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் ரூ.1506.76 கோடி ஈவுத் தொகை வழங்கியது. என்எச்பிசி நிறுவனம், தற்போது, சுமார் ஏழு லட்சம் பங்குதாரர்களை வைத்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT