இந்தியா

கேரளத்தில் புதிதாக 14,424 பேருக்கு கரோனா தொற்று

10th Jun 2021 06:15 PM

ADVERTISEMENT

கேரளத்தில் புதிதாக 14,424 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 14,424 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த நாள்களில் மேலும் 194 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,631 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,42,242 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,35,298 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT