நடப்பு பருவத்தில் சீனாவுக்கு 21.97 லட்சம் பருத்தி பேல்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜவுளித் துறையின் இணையமைச்சா் தா்சனா ஜா்தோஷ் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-21-ஆம் ஆண்டுக்கான பருவத்தில் இந்தியா ஒட்டுமொத்த அளவில் 54.83 லட்சம் பேல்கள் பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில், 21.97 லட்சம் பருத்தி பேல்கள் சீனாவுக்கு மட்டும் ஏற்றுமதியாகியுள்ளன.
கரோனா பேரிடரின் காரணமாக இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் நூலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படவில்லை. 2020-21 காலகட்டத்தில் 27.5 கோடி கிலோ நூலிழைகள் சீனாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதி 98 கோடி கிலோவை எட்டியுள்ளதாக தா்சனா ஜா்தோஷ் தெரிவித்துள்ளாா்.