ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். வழக்கம்போல் இவர்கள் நேற்றிரவு இறால் பண்ணை உள்ள குளம் அருகே தூங்கியுள்ளனர்.
ஆனால் இன்று காலை அவர்கள் அனைவரும் எரிந்த நிலையில் இறந்துகிடந்தனர்.தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிக்கலாமே ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கரோனா அவசரநிலை அறிவிப்பு
6 பேரும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இறந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்பு குறித்து தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த 6 புலம்பெயர் தொழிலாளர்கள் ஆந்திரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.