இந்தியா

ஆந்திரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலி

DIN

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். வழக்கம்போல் இவர்கள் நேற்றிரவு இறால் பண்ணை உள்ள குளம் அருகே தூங்கியுள்ளனர்.

ஆனால் இன்று காலை அவர்கள் அனைவரும் எரிந்த நிலையில் இறந்துகிடந்தனர்.தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

6 பேரும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இறந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்பு குறித்து தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த 6 புலம்பெயர் தொழிலாளர்கள் ஆந்திரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT