மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் 9வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நாட்டில் மீண்டு உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி
இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்ததால், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.
மேலும், அவையில் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது, சத்தம் போடுவது போன்ற புகார்கள் வந்துள்ளது. இவை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவைத் தலைவர், பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.