காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தில், தொடர்ந்து 8வது நாளாக பெகாஸஸ் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்ற அவைகள் நாளை(ஜூலை 30) வரை ஒத்திவைப்பு
இந்நிலையில், காங்கிரஸின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.