இந்தியா

சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை காங். எம்.பி.க்கள் கூட்டம்

ANI

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தில், தொடர்ந்து 8வது நாளாக பெகாஸஸ் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸின் மக்களவை மற்றும் மாநிலங்களவை  உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT