இந்தியா

கூடுதலாக 3 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக, 3 ஆயிரம் விரைவுத் தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதத்துக்காக, தினசரி 5 ஆயிரம் எண்ணிக்கையில் ரூ.300 விரைவுத் தரிசன டிக்கெட்டுகள் கடந்த 20-இல் தேவஸ்தான இணையதத்தில் வெளியிடப்பட்டன. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடத்துக்குள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதுதவிர, ஆகஸ்ட் 17 முதல் 20-ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் மட்டும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அதை வெளியிடும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT