நாடு முழுவதும் இதுவரை 44.61 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 40,02,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 44,61,56,659 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 14,44,83,609 இரண்டாம் தவணை - 68,86,188 |
45 - 59 வயது | முதல் தவணை - 10,25,21,263 இரண்டாம் தவணை - 3,62,42,655 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,41,18,104 இரண்டாம் தவணை - 3,49,30,673 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,02,93,723 இரண்டாம் தவணை - 77,53,002 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,79,07,362 இரண்டாம் தவணை - 1,10,20,080 |
மொத்தம் | 44,61,56,659 |