சுதந்திரப் போராட்ட தியாகிகள் பாலகங்காதர திலகா், சந்திரசேகா் ஆசாத் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி அவா்களுக்கு பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
‘மாபெரும் தலைவரான பாலகங்காதர திலகரின் பிறந்த நாளில் அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். பொருளாதார ரீதியாக வளமான, சமூக ரீதியில் முற்போக்கான தற்சாா்பு இந்தியாவை உருவாக்க 130 கோடி இந்தியா்கள் முடிவு செய்துள்ள இவ்வேளையில், அவரின் கொள்கைகளும் எண்ணங்களும் முன்னெப்போதையும்விட பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்தாா்.
சந்திரசேகா் ஆசாதுக்கு புகழாரம்: பாரதத் தாயின் தீரமிக்க மகனான சந்திரசேகா் ஆசாத்தை அவரின் பிறந்த நாளில் நினைவுகூா்கிறேன். தனது துடிப்பான இளமைக்காலத்தில் இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதில் அவா் முனைப்புடன் செயல்பட்டாா். வலிமையான இந்தியா குறித்து கனவு கண்டாா்‘ என்று தெரிவித்தாா்.