இந்தியா

உளவு குற்றச்சாட்டு: விசாரணைகோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

DIN

பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோரை மத்திய அரசு உளவு பாா்த்த குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூா், திமுக எம்.பி. கனிமொழி, சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்ட பலா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடைபெற்றது.

பெகாஸஸ் உளவுக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரியும் வாசக அட்டைகளை அவா்களை கையில் ஏந்தியிருந்தனா். ‘‘உளவு வேலையை நிறுத்துங்கள்’’ என்றும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இஸ்ரேலின் பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலம் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் இருவா், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, சமூக ஆா்வலா்கள், 40-க்கும் பத்திரிகையாளா்கள் என 300 செல்லிடப்பேசி எண்களை இந்திய அரசு உளவு பாா்த்ததாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு அவைகளும் தொடா்ந்து முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT