உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அதிகாலை 1.28 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலநடுக்கத்தின் போது பதிவான ரிக்டர் அளவுகோல் 3.4 எனவும் , அதன் மையப்பகுதி கிழக்கு உத்தரகாசியில் இருந்து 23 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கடந்த வாரம் உத்தரகண்டின் பித்தோகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.