நாடு முழுவதும் இதுவரை (ஜூலை 22) வரை 42.75 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 42.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் முதல் தவணையாக 33,65,24,833 பேருக்கும், இரண்டாது தவணையாக 9,09,75,439 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.